சாய் பாபா பாடல் ”அம்மாவின் வடிவாக....”

#spiritual #Holy sprit #Saibaba
சாய் பாபா பாடல் ”அம்மாவின் வடிவாக....”

கருவாக்கி வைத்தென்னை தாங்கிய ஸ்ரீ சாயி
உயிராய் உணர்வாய் எனை உன்னுள் நிறைவாய்
உடலும் மனமும் அறிவும் தந்த சீரடி சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா சரணம்

கர்மவினை தொடர்ந்ததனால் ஜனன பந்தம் தந்து
உன் கருவறையில் வைத்தவனே ஸ்ரீ குரு சாயி
அம்மா உன் மடிமீது நாள் தோறுமே
நான் கண்ட பேரின்பம் இது போதுமே
ஆயிரம் ஜென்மத்து கண்ட விட்டேன்
பூரணம் தரும் சாயி
அரவணைத்து அருள வேண்டும் ஸ்ரீ குரு சாயி
அரவணைத்து அருள வேண்டும் சீரடி சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா மாயி
எங்கிருந்தோ எனை எடுத்து உயிர் அமுதம் ஊட்டி
உன் கருணை என்னும் பால் கொடுத்த தாயே குருநாதா
அம்மா உன் மகனுக்கு எது வேண்டுமோ
அந்தந்த காலத்தில் தந்தாயே நீ
காத்திடும் எது காலடி கிடந்தேன் ஆனந்த இது சாயி
மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி
உன் மகனெனக்கு போதும் இந்த பேரருள் சாயி
சரணம் சரணம் சீரடி சாயி
அபயம் அபயம் துவாரகா மாயி

மேலும் ஆன்மீக தகவல்களை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.